மூச்சுத்திணறல் காரணமாக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி - சோகத்தில் ரசிகர்கள்
பிரபல மூத்த நடிகர் கைகலா சத்ய நாராயணா மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வில்லன், குணசித்திரம் உட்பட பல்வேறு வேடங்களில் தெலுங்கில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்ய நாராயணா தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமனின் மாமனாராகவும், பெரியார் படத்தில் பெரியாரின் தந்தையாகவும் நடித்திருந்தார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான மகேஷ்பாபுவின் ’மகரிஷி’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின் படங்களில் நடிப்பைதை குறைத்துக்கொண்ட அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு இன்று மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைகலா சத்ய நாராயணா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள், நடிகர்கள் சமூக வலை தளத்தில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.