அந்த நடிகருடன் பணியாற்றும்போது.. சம்பளத்திற்கு 40 முறை அலைந்துள்ளேன் - ஜனகராஜ் வேதனை!

Kamal Haasan Rajinikanth Tamil Cinema Tamil Actors
By Jiyath Oct 10, 2023 11:30 AM GMT
Report

நடிகர் ஜனகராஜ் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் ரஜினி,கமலுடன் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்

நடிகர் ஜனகராஜ்

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தனது நகைச்சுவையால் கலக்கியவர் நடிகர் ஜனகராஜ். தனக்கே உரிய பாணியில் பேசியும், சிரித்தும் மக்களை கவர்ந்தார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96.

அந்த நடிகருடன் பணியாற்றும்போது.. சம்பளத்திற்கு 40 முறை அலைந்துள்ளேன் - ஜனகராஜ் வேதனை! | Actor Janakaraj About About Actor Rajini And Kamal

அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார். அதன்பின் ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனகராஜ் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் ரஜினி,கமலுடன் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.

பேட்டி

அவர் பேசியதாவது "நாம் என்னதான் பெர்பாமென்ஸ் கொடுத்து நடித்தாலும் கமலின் ரியாக்ஷன் ஜஸ்ட் சிரிப்பா மட்டுமே இருக்கும். ஆனால் பல நேரங்களில் நடிப்பில் சில மாறுதல்களும் செய்ய சொல்வார்.

அந்த நடிகருடன் பணியாற்றும்போது.. சம்பளத்திற்கு 40 முறை அலைந்துள்ளேன் - ஜனகராஜ் வேதனை! | Actor Janakaraj About About Actor Rajini And Kamal

'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் சொல்லிக் கொடுத்தபடி நான் சிரித்த அந்த வித்தியாசமான சிரிப்பு இன்று வரை என்னுடைய எவர்கிரீன் மாடுலேஷனாக இருக்கிறது. ஆனால் ரஜினியுடன் படங்களில் பணியாற்றும் போது, நான் நடிக்கும் காட்சிகள் நன்றாக வந்துவிட்டால் "அடி தூள்.. கிளப்புங்க..." என்று ரஜினி வாய் நிறைய பாராட்டுவார். மேலும், சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்த பின்தான் என்னுடைய சம்பளத்தை கேட்பேன்.

டப்பிங் பணி முடித்த பின் கேட்பேன் என்பதால் பலபேர் உடனடியாக பணத்தை தராமல் இழுத்தடிக்கவும் செய்திருக்கிறார்கள். சிலரிடம் 'உங்களை நம்பி தானே படத்தில் வேலை செய்தேன் இப்படி வேலை முடிந்ததும் இழுத்தடிக்கலாமா? என்று சம்பளத்திற்காக சண்டையும் போட்டிருக்கிறேன். சில தயாரிப்பாளர்கள் என்னை 40 முறை கூட சம்பளத்திற்காக அலைய வைத்திருக்கிறனர். சில படங்களுக்கு சம்பளமே வாங்காமலும் இருந்திருக்கிறேன்' என்று ஜனகராஜ் பேசியுள்ளார்.