தவறுதலாக தன்னை தானே சுட்டுக்கொண்ட நடிகர் கோவிந்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

India Actors Bollywood Mumbai
By Karthikraja Oct 01, 2024 07:33 AM GMT
Report

நடிகர் கோவிந்தா காலில் குண்டு பாய்ந்ததில் மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளார்.

கோவிந்தா

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர் கோவிந்தா(Govinda). தமிழில் ரம்பா, ஜோதிகா, லைலா நடித்த த்ரீ ரோஸஸ் படத்தில் மெய்யானதா, பொய்யானதா பாடலில் நடனம் ஆடி இருப்பார். 

actor govinda

நடிகர் மட்டுமின்றி காங்கிரஸ் சார்பில் எம்பி ஆக இருந்த இவர் தற்போது சிவசேனா கட்சியில் பயணித்து வருகிறார். 165 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 2019 தீவிர அரசியலில் இறங்கியதால் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

காலில் பாய்ந்த குண்டு

அவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது. மும்பையில் இருந்து கொல்கத்தா செல்ல அவர் தயாராகி கொண்டிருந்த போது, அவரது துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. அதை பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக காலில் சுட்டுக்கொண்டுள்ளார். 

நடிகர் கோவிந்தா

இதனால் காலில் இருந்து ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது காலில் இருந்த குண்டு அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் குணமடைந்த பின் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவிந்தா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்களும் சிவசேனா தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபலங்களும் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.