"பிரிவதாக வெளியான அறிவிப்பு அவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு ஆச்சரியமாக இல்லை" - நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து புதிய தகவல்

divorce dhanush aishwarya rajinikanth reason behind decision
By Swetha Subash Jan 19, 2022 08:30 AM GMT
Report

கடந்த திங்கட்கிழமை இரவு, தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில் தானும் தனது மனைவி ஐஸ்வர்யாவும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து சுமூகமாக பிரிய முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் இதே போன்ற அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இருவரும் ஒன்றாக வெளியிட்ட அந்த அறிக்கையில்,

“18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம்.

நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.

தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதை முதலில் நம்பாத தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து மனவேதனை அடைந்தனர்.

இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்கள் தனிப்பட்ட தேர்வுகளின் காரணமாக சமீப ஆண்டுகளாக பிரிந்திருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள்.

தனுஷ் வழக்கத்தை விட மிகவும் செழிப்பாக மாறினார், பல படங்களில் கையெழுத்திட்டார், இதன் விளைவாக அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிடவில்லை. இதற்கிடையே, ஐஸ்வர்யாவும் ஆன்மீகத்தில் ஆறுதல் தேடத் தொடங்கினார்.

தனுஷ் சக நடிகைகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியான வதந்திகளும் பிரிவை அதிகமாக்கியிருக்கிறது.

"அவர்களின் திருமண உறவில் சிக்கல்கள் இருந்தன, அதனால் அவர்கள் பிரிவதாக வெளியான அறிவிப்பு அவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு ஆச்சரியமாக இல்லை" என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

தங்கள் திருமண நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்ய லாக்டவுன் அவர்களுக்கு உதவியதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

யோகா, உடற்பயிற்சி, மற்றும் ஆன்மீகத்தில் லயித்த மனதையும் வளர்த்துக் கொண்ட ஐஸ்வர்யாவுக்கு, திருமண உறவில் இருப்பது அவசியமாகவோ அல்லது முன்னுரிமையாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.