வடிவேலு நல்ல மனிதர் இல்ல; அவரு கேரவன்ல.. நாங்க ரோட்ல - நடிகர் பெஞ்சமின் வேதனை!

Tamil Cinema Vadivelu Actors Tamil Actors
By Jiyath Jan 12, 2024 03:15 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து நடிகர் பெஞ்சமின் பேசியுள்ளார். 

நடிகர் வடிவேலு

வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

வடிவேலு நல்ல மனிதர் இல்ல; அவரு கேரவன்ல.. நாங்க ரோட்ல - நடிகர் பெஞ்சமின் வேதனை! | Actor Benjamin Talks About Actor Vadivelu

சில காலங்களில் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சந்திரமுகி, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது.

ஆனால் சமீப காலங்களில் அவருடன் நடித்த துணை நடிகர்களின் நேர்காணல்களால், பல விமர்சனங்களையும் வடிவேலு சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் அளித்த நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

பெஞ்சமின் வேதனை

அவர் பேசியதாவது "போண்டாமணி, தான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலுதான் காரணம். அவர் பிறவிக்கலைஞர் என்றாலும் நல்ல மனிதர் கிடையாது.

வடிவேலு நல்ல மனிதர் இல்ல; அவரு கேரவன்ல.. நாங்க ரோட்ல - நடிகர் பெஞ்சமின் வேதனை! | Actor Benjamin Talks About Actor Vadivelu

தான் இறப்பதற்கு முன்பு வடிவேலுவை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என்று போண்டா மணி விருப்பப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிராசையானது. படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார். நான்கைந்து துணை நடிகர்கள் வடிவேலுவிற்காக காத்திருக்க வேண்டும்.

அதில் ஒருவரை அவர் தேர்ந்தெடுப்பார். ஒரு நாளில் ஒரு நடிகர் மட்டுமே நடிக்க வேண்டிய சூழலில் 5 பேர் வந்தால் பாதி சாப்பாட்டில் உணவு பறிக்கப்படும். இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் வடிவேலு கேரவனில் சென்று அமர்ந்து கொள்வார். தாங்கள் மர நிழலிலோ சாலைகளிலோ நின்று கொண்டு சாப்பிட வேண்டும்" என்று நடிகர் பெஞ்சமின் வேதனை தெரிவித்துள்ளார்.