டேய் இவன் டா.. அடிக்க வந்த ரசிகர்கள்; அஜித் செய்த தரமான சம்பவம் - என்ன நடந்தது?

Ajith Kumar Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jul 01, 2024 11:27 AM GMT
Report

ஜனா படத்தின்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து நடிகர் பாவா லட்சுமணன் பேசியுள்ளார்.  

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

டேய் இவன் டா.. அடிக்க வந்த ரசிகர்கள்; அஜித் செய்த தரமான சம்பவம் - என்ன நடந்தது? | Actor Bava Laxmanan Talks About Ajith Kumar

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பாவா லட்சுமணன் "ஜனா படத்தின்போது அஜித் ரசிகர்கள் மொட்டை அடித்துக்கொண்டு அவரை பார்க்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் அஜித் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது கூட்டத்தை க்ளியர் செய்யும் வேலையை நான் பார்த்துக்கொண்டேன்.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு; அதுக்கு ரொம்ப முக்கியமானது.. நடிகை ஓபன் டாக்!

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு; அதுக்கு ரொம்ப முக்கியமானது.. நடிகை ஓபன் டாக்!

பாவா லட்சுமணன்

பின்னர் ஒரு இடத்தில் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த சிலர், 'டேய் இவன் யாருனு தெரியுதா.. அவன் டா' என்று கூறி என்னை அடிக்க வந்தார்கள். உடனடியாக நான் அஜித்தின் கேரவனுக்கு சென்றேன்.

டேய் இவன் டா.. அடிக்க வந்த ரசிகர்கள்; அஜித் செய்த தரமான சம்பவம் - என்ன நடந்தது? | Actor Bava Laxmanan Talks About Ajith Kumar

விஷயத்தை அவர் கேள்விப்பட்டதும் உடனடியாக அந்த ரசிகர்களிடம் வந்து, 'டேய் எதுக்கு லட்சுமணன் அடிக்கப் போறீங்க. அவர் அவரோடு ட்யூட்டிய செஞ்சாரு.. ஃபோட்டோ எடுக்க சொன்னீங்க எடுத்தாச்சு. எல்லோரும் கிளம்புங்கடா' என்று சொன்னார்.அதற்கு பிறகுதான் அவர்கள் கிளம்பினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.