பெண்களின் மனதை கவர்ந்த ஆணழகன் அரவிந்த்சாமி பிறந்த தினம் இன்று!
`90;ஸ்களில்’ தமிழ்நாட்டின் பல இளம்பெண்களின் தூக்கத்தைக் கெடுத்த நாயகன், குணசித்திர நடிகரான அரவிந்த் சாமி பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு..
கனவு நாயகன் அரவிந்த் சாமி:
1967 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ம் தேதி சென்னையில் பிறந்தவர் அரவிந்த் சாமி. 90களின் காலகட்டத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளைகள் அரவிந்த் சாமியால் பெரும் துன்பங்களிற்கு ஆளானார்கள். மாப்பிள்ளை அரவிந்த் சாமியைப் போல இருக்க வேண்டும் என்பது அன்றைய ஒட்டுமொத்த இளம்பெண்களின் கனவாகவே இருந்தது.
காதல் ரோஜாவே:
இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி திரைப்படம் மூலம் 1991 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, அறிமுகமான படத்திலேயே ரஜினி மற்றும் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அதில் கலெக்டராக வரும் அவரது காட்சியில் அறிமுக நடிகர் என்ற தோற்றமே தெரியாது. அதற்கு அடுத்த ஆண்டில் மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறினார் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த படத்தில் இடம் பெற்ற அந்த காதல் காட்சியில் நான் ஒன்னும் ரொம்ப மோசமானவன் இல்லை கொஞ்சம் நல்லவன் தான் என்ற காட்சியும், படத்தின் இறுதி காட்சியில் நாட்டு பற்றையும் தன் மனைவி மீது உள்ள காதலையும் சொல்லும் காட்சியும் இப்போதும் காதல் பூக்கும்.. காதல் ரோஜாவே பாடலுக்கு இன்றும் ஏராளமானோர் அடிமையானவர்களே.
கெட்டப்புக்கு தகுந்தார் போல் பாவனைகள்:
[
அதன் பிறகு தமிழ் சினிமாவின் ஆணழகனாக கொண்டாடப்பட்டார் அரவிந்த்சாமி, 1995 ல் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் திரைப்படத்தில் நடித்தார் வழக்கமாக மணிரத்னம் திரைப்படத்தில் கடல் இருக்கும்...கூடவே காதலும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அரசியலும் இருக்கும். அதில் நா உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா? என சேகராகவே வாழ்ந்திருப்பார் அரவிந்த்சாமி, அந்த வார்த்தைக்கு வலு சேர்த்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் கதையினை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும்.
காதல் மனம் சார்ந்தது...மதம் சார்ந்ததல்ல என்பதை சொன்ன பம்பாய் திரைப்படம் விமர்சனங்களை சந்தித்தாலும் செம ஹிட் படமாக அமைந்தது.. அதன் பிறகு வெளியான இந்திரா, மின்சாரக் கனவு மற்றும் என் சுவாசக் காற்றே போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் அரவிந்த் சாமி. 2000 ம் ஆண்டு மாதவன் அறிமுகமான அலைபாயுதே திரைப்படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ஏதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதன் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு லாங் லீவ் எடுத்த அரவிந்சாமி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படம் மூலம் குணச்சித்திர நடிகராக தனது காலை பதித்தார்.
வில்லன் ஆன ஆணழகன்:
2015 ல் மோகன்ரஜா இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படத்தில் சித்தாத் அபிமன்யுவாக நடித்தார் வழக்கமாக சினிமா வில்லன்களை காட்டிலும் சித்தாத் அபிமன்யு பாத்திரம் வேறுபட்ட வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் அரவிந்த்சாமி நீ கொடுத்த வாழ்க்கைய நான் ஏத்துக்கல நீ கேட்ட வாழ்க்கைய நான் கொடுத்துட்டேன் நாட்டுக்காகலாம் இல்ல நீ கேட்ட நான் கொடுத்துட்டேன் இந்த காட்சி அனைவரின் இதயத்தை தொட்டகாட்சியாகவும், ரசிக்கும் காட்சியாகவும் இருக்கும். அதன் பிறகு வெளியான போகன் திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தாலும் ஆதித்யாவாக நம்மை மிரட்டியிருப்பார் அரவிந்த்சாமி.செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் அவ்வளவு நட்சத்திரங்கள், அனைத்தும் அக்னி நட்சத்திரங்கள். பதற்றமும் பரபரப்பும் முகமாய்க் கொண்ட வரதனாக அசத்தியிருப்பார் அரவிந்த்சாமி. உனக்கு யாராவது பழைய பிரண்ட் இருக்கானா நம்பாதே இந்த வசனம் நட்பின் துரோகத்தை சொல்லும் விதமாக இருக்கும்.
எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸ் ஆன அரவிந்த்சாமி:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார் எம்.ஜி.ஆர். ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார் அதில் நான் உங்கள் வீடு பிள்ளை என்ற காட்சி சமீபத்தில் இணையத்தில் வைரலானது, அதே போல் கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படத்தில் அரவிந்சாமி நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்கிலோ டிஜிட்டல் தளத்திலோ வெளியாகும் என்று கருதப்படுகிறது.
தொழிலதிபர் அரவிந்த்சாமி:
நடிகனாக எவ்வளவு பெயர்களை சம்பாதித்தாரோ அதேபோல தொழிலும் சம்பாதித்துள்ளார் என்றே சொல்லலாம். ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தில் தலைவராகவும் செயல்பட்டுள்ளளார். பின்னர் தானே சொந்தமாக டேலண்ட் மக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு கீழ் 5000 பேர் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் கடந்து வெள்ளை மழை பாடல் ஒளிக்கும் போது இப்போதும் பெண்களின் மனதில் ஆணழகன் அரவிந்த்சாமி தான் என்பதை மறுக்கமுடியாது.