அமீர் கானுடன் திருமணமா? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை
நடிகர் அமீர் கானை திருமணம் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு நடிகை பாத்திமா சனா ஷேக் விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட்டில் மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் அமீர் கான்.
அவருக்கு இரு முறை திருமணம் நடந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்தவர், கடந்த 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
அதையடுத்து 2001 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான லகான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை கடந்த 2005-ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார்.
16 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஜூலை மாதம் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்தனர். பின்னர் தங்கல் படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், அமீர் கானைத் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திகளுக்கு நடிகை பாத்திமா சனா ஷேக் பதில் அளித்துள்ளார்.
நான் இதுவரை சந்திக்காத சில பேர் கூட என்னைப் பற்றி எழுதுகிறார்கள். அது உண்மையா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. இதைப் படிப்பவர்கள் நான் 'நல்லவர் இல்லை' என்று நினைக்கிறார்கள்.
அந்த நபரிடம், 'என்னைக் கேளுங்கள், நான் உங்களுக்கு பதில் தருகிறேன்' என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது என்னைத் தொந்தரவு செய்கிறது, ஏனென்றால், மக்கள் என்னை தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் .