திரைப்பட படப்பிடிப்பின் போது விபத்து - படுகாயமடைந்த பிரபல நடிகை..!
கன்னட திரைப்படத்தின் படிப்பிடிப்பின் போது பிரபல நடிகை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
அறிமுகம்
கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமயுக்தா ஹெக்டே தமிழ் சினிமாவில் கோமாளி, பப்பி,தேல் ஆகிய திரைப்படங்களில் நடத்துள்ளார்.
சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானாவர்.
பெங்களூரில் க்ரீம் என்ற கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நேற்று படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டு வந்தது.
படப்பிடிப்பு விபத்து
அப்போது படப்பிடிப்பின் போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து காயம் அடைந்தார்.
(புகைப்படத்தில் இருப்பது ரத்த கறைகள் இல்லை - நடிப்பதற்காக பூசப்பட்ட சாயம்)
அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து இந்த விபத்து குறித்து படத்தின் அறிமுக இயக்குநர் அபிஷேக் பசந்த் விளக்கம் அளித்தார்.
ஒரு கடுமையான ஆக்ஷன் காட்சியின் போது இறுதி ஷாட்டுக்கு முன் அவர் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருக்கு ரத்த காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
அவரது உடையில் உள்ள ரத்த கறைகள் நாங்கள் எடுக்கப்பட்ட அதிரடி காட்சிகளின் ரத்த கறைகளின் சாயம் என்று தெரிவித்துள்ளார்.