லாரி மோதி தூள் தூளாக நொறுங்கிய கார் : உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி - அதிர்ச்சி சம்பவம்
அனந்தபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் திருமணத்துக்கு சென்று திரும்பிய 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பதி அருகே, அனந்தபுரம், பல்லாரியை சேர்ந்த 9 பேர் உரவ கோட்டையில் நேற்று நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, காரில் இரவு ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பல்லாரி பகுதியில் எதிர்திசையில் வந்த லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் மோசமான நிலையில் நசுங்கியதால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை மீட்பது சவாலான காரியமாக இருந்தது.
எனவே, போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் காரை உடைத்து உடல்களை மீட்டெடுத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஆந்திர போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளது.