AC இயந்திரத்தில் மின்கசிவு; வெளியான கரும்புகையால் தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்!
ஏசி இயந்திரத்தில் இருந்து வெளியேறிய கரும்புகையால் மூச்சு திணறி தாய், மகள் இருவரும் உயிரிழப்பு.
மின்கசிவு
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர்கள் ஹாலினா (50) மற்றும் அவரின் மகள் நஸ்ரின் (16). மகள் நஸ்ரின் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று இரவு இவர்கள் இருவரும் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த அறையில் இருந்த ஏசியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கரும்புகை வெளியேறியுள்ளது.
உயிரிழப்பு
இதனால் தாய் மற்றும் மகள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.