கருணாநிதியை விளாசிய கிட்டு! கருணாநிதி என்ற கருநாகம் - திமுகவை அலறவிட்ட மேதகு இயக்குனர்!
மேதகு திரைப்படத்தின் இயக்குனர் கிட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசி, பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
கிட்டு இயக்கிய மேதகு படம் கடந்த 25ம் தேதி ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, பெரியார் உள்ளிட்டோரை கிண்டல் செய்து தன் ஃபேஸ்புக் பக்கத்தல் கிட்டு போட்ட போஸ்ட்டுகள் சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி கிட்டு பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில், நாங்கள் வெடித்துச் சிதறுகையில், வெடிகுண்டு சத்தத்தை தாண்டி ஒரு குழந்தையின் அழுகுரல் உமக்கு கேட்கவில்லையோ? நாற்காலி மோகம் பிடித்தவரே. கருவை தாண்டி வந்து ஒரு சிசுவின் கை கெஞ்சியதே காப்பாற்ற. உமக்கு பார்வை பறிபோனதோ. பதவி வெறி பிடித்தவரே. இதோ கருணாநிதி என்ற திராவிடர் தமிழினத்திற்கு செய்த துரோக வரலாறு என கூறி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
தமிழன் என்கிற வேடமிட்டு
ரயிலேறி வந்தாரு வித்தவுட்டு
தமிழன்னு கூசாம சொல்லிக்கிட்டு
அட திராவிட கட்சியில பாடுபட்டு
ஊரெல்லாம் கட்டுப்பாடு கட்டுஅவுட்டு
ஆனால் கட்டுலோட மூன்று பேத்த தொட்டு தொட்டு
ஈழத்தில தமிழன கொன்னுவிட்டு
அங்கு சோனியா மடியில தாலாட்டு
கச்சத்தீவ பேசாம விட்டுவிட்டு
அதை மீட்பேனு பாடுறியே பொய் பாட்டு
தமிழன சாதி சொல்லி பிரிச்சுவிட்டு
சாதி சங்கத்துக்கு தலா இரண்டு சீட்டு என கொந்தளித்து பாடியுள்ளார்.
மேலும், கருணாநிதி என்னும் கருநாகத்தின் துரோகத்தை தமிழினம் மன்னித்தாலும் எங்கள் தாய் தமிழ் ஒருபோதும் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் உள்ள
பெரியார், கருணாநிதி ஆதரவாளர்கள் பலரும் அவரது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.