காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் வீசிய காதலன் ... நடுங்க வைக்கும் பயங்கரச் சம்பவம்..!

Attempted Murder Delhi
By Nandhini Nov 14, 2022 08:00 AM GMT
Report

காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி காதலன் பிரிட்ஜில் 18 நாட்கள் வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காதலாக மாறிய நட்பு

மும்பையைச் சேர்ந்தவர் அப்தா. இவர் ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தில் ஷரத்தா என்ற பெண் பணிபுரிந்து வந்தார். அப்தாவிற்கும், ஷரத்தாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

ஆனால், இவர்களுடைய காதல் இரு வீட்டாருக்கும் தெரியவர, இரு குடும்பமும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, இந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேறி டெல்லி, மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால், ஷரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்தாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

abda-sharada-boy-friend-murder-delhi

காதலை துண்டு துண்டாக வெட்டிய காதலன்

கடந்த மே மாதம் அப்தாப்விடம் ஷ்ரத்தா பயங்கரமாக சண்டை போட்டதால், இதனால் கோபமடைந்த அப்தா, ஷரத்தாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவர் ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின், ஒரு பெரிய பிரிட்ஜை வாங்கி வந்து அதில் ஷரத்தாவின் உடலை வைத்துள்ளார். இந்த உடல் துண்டுகளை 18 நாட்களாக டெல்லி முழுவதும் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து வந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார்

தன் மகளை காணாமல் தவித்த ஷரத்தாவின் தந்தையும், குடும்பமும் சமூகவலைதளங்கள் மூலம் ஷரத்தா இருக்கும் இடத்தை அறிந்தனர். மகளை ஆசையாக பார்க்க அவரது தந்தை டெல்லிக்கு வந்துள்ளார். ஆனால், ஷரத்தாவை தொடர்பு கொள்ள முடியாமல் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்தாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்தா, ஷரத்தாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததை கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

இதன் பின், அப்தாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி காதலன் பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக நகர் முழுவதும் எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.