திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம்
டார்லிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதேபோல் ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர்.
ஒன்றாக படங்களில் நடித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஆதி - நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.
இவர்களது திருமணம் கடந்த 18ம் தேதி சென்னையில் எளிமையாக நடைப்பெற்றது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி சாமி தரிசனம் செய்தனர்.
இருவருக்கும் தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவர்களை பார்த்ததும் ரசிகர்கள் இவர்களுடன் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.