கர்ப்ப காலத்தில் ரவி அந்த மாதிரி விஷயங்கள் பண்ணாரு; 3,4 மணிக்கெல்லாம்.. - மனைவி ஆர்த்தி பளீச்!

Jayam Ravi Tamil Cinema Actors Tamil Actors
By Jiyath Nov 05, 2023 03:59 PM GMT
Report

தனது கர்ப்ப காலத்தில் ஒரு கணவனாக ஜெயம் ரவி தன்னை எப்படி கவனித்துக்கொண்டார் என்பதைப் பற்றி மனைவி ஆர்த்தி பேசியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் மோகன் ராஜாவின் சகோதரர் ஆவார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

கர்ப்ப காலத்தில் ரவி அந்த மாதிரி விஷயங்கள் பண்ணாரு; 3,4 மணிக்கெல்லாம்.. - மனைவி ஆர்த்தி பளீச்! | Aarti Has Spoken About Her Husband Jayam Ravi

தொடர்ந்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கு எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், தனி ஒருவன், கோமாளி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் ஜெயம் ரவி நடித்தார்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் ஒரு நேர்காணலில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியுடன் கலந்து கொண்டார். அப்போது, தனது கர்ப்ப காலத்தில் ஒரு கணவனாக ஜெயம் ரவி தன்னை எப்படி கவனித்துக்கொண்டார் என்பதைப் பற்றி ஆர்த்தி பேசியுள்ளார்.

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. நடிகை மீனா வெளிப்படை!

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. நடிகை மீனா வெளிப்படை!

மனைவி பேட்டி

அவர் பேசியதாவது "முதல் மகன் ஆரவ் பிறக்கும்போது ரவி ஊரிலேயே இல்லை. அவர் இங்கே இருக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டார். ஆனால் என்னுடைய பிரசவம் சீக்கிரமாக ஆகிவிட்டது.

கர்ப்ப காலத்தில் ரவி அந்த மாதிரி விஷயங்கள் பண்ணாரு; 3,4 மணிக்கெல்லாம்.. - மனைவி ஆர்த்தி பளீச்! | Aarti Has Spoken About Her Husband Jayam Ravi

எனக்கு தெரியும் அவரின் தொழில் அப்படிதான் என்று. ஆனால் என்னுடைய கர்ப்ப காலத்தில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, நான் வாந்தி எடுக்கும்போதெல்லாம் அதை ரவி கையிலேயே பிடிப்பார். அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நிறையவே எனக்கு பண்ணியிருக்கிறார். பக்கத்திலேயே இருப்பார். அதிகாலை 3,4 மணிக்கெல்லாம், நான் எதையாவது சாப்பிட வேண்டும் என்று கூறினால் எழுந்து வருவார்.

பின்னர் 5 மணிக்கு தூங்கிவிட்டு ஷூட்டிங் சென்று விடுவார். ஒரு கணவனாக அவருக்கு நான் 100க்கு மேல் மார்க் கொடுப்பேன். ஒரு கணவனாக எல்லோரும் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன்" என்று ஆர்த்தி பேசியுள்ளார்.    

You May Like This Video