நான் எங்கும் ஓடவில்லை. என்னை... அசிங்கப்படுத்தாதீங்க... - ஆர்த்தியின் கணவர் கண்ணீர் விட்டு கதறல்
காமெடி நடிகர் கணேஷ் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அரண்னை, இது கதிர்வேலன் காதலன், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009 -ம் ஆண்டு நகைச்சுவை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியும் கட்டுப்பாட்டை இழந்து காரில் மோதி கீழே விழுந்தார்.
பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடி ஓடி வந்தபோது, கணேஷ் காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், போலீசார் அவரை தேடியதாகவும், கணேஷ் மனைவி ஆர்த்தியும் வீட்டில் இல்லை என்ற தகவலும் வெளியானது.
இதனால், நடிகர் கணேஷும், அவரது மனைவி ஆர்த்தியும் தலைமறைவாகிவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கணேஷுக்கு என்ன ஆனது? ஆர்த்தி எங்கே என்று மக்கள் குழம்பிய நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்தப்படி கணேஷ் மற்றும் அவரது மனைவில் விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் விளக்கமளித்ததாவது -
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் என்னுடைய ஹோண்டா ஜேஸ் கார் மோதி விபத்துள்ளானது. அப்போது, நான் மயங்கிவிட்டேன். பிறகு மயக்கம் தெளிந்த நான், என் மனைவியை தொடர்பு கொண்டு பேசினேன்.
எனக்கு உடல் நிலை முடியவில்லை. உடம்பெல்லாம் வேர்த்து விட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் என்னை ஆட்டோவில் ஏற்றினர். பிறகு ஹாஸ்பிட்டலுக்கு சென்றோம். பின்னர், போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள்.
அப்போது முழுமையாக நடந்ததை விளக்கினோம் என்று ஆர்த்தி கூறினார். எல்லோரும், ஓடிட்டாங்க என பொய்யாக பேசிட்டாங்க. அது உண்மை இல்லை. உண்மை என்னான்னு முதலில் தெரிஞ்சுக்கல.
குடிபோதையில் பண்ணிட்டனு எல்லாம் அசிங்கப்படுத்திட்டாங்க என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார் கணேஷ்.
மீடியோ சகோதரர்களே என்ன நடந்தது என்று தெரியாமல், எதுவும் உடனே போட்டுவிடாதீங்க. ஒரு கலைஞனை அவமானப்படுத்தாதீங்க. மக்களுக்கு தெரியும் நல்லவனா கெட்டவனா என்று. தயவு செய்து ஒரு கலைஞனை கலங்க வைக்க வேண்டாம். உண்மையை போடுங்க என்று கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார்.