இந்த ராசிக்கார்களுக்கு மட்டும் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி உள்ளதாம்!
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்கள் இருக்கிறார்கள். இந்த 12 ராசிகாரர்களில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் பணம் அதிகரிக்கும் சக்தி படைத்தவர்களாக இருப்பார்களாம்.
எந்த ராசிக்காரர்கள் பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்ப்போம் -
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்கள் கடமையை சரியாக செய்து வருவார்கள். பலனை அதிகம் எதிர்பார்க்கவே மாட்டார்கள். தர்மத்தின் வழியிலும், நியாயமாகவும் பணத்தை சம்பாதிக்கும் குணம் படைத்தவர்கள்.
அதிகம் கடன் வாங்க மாட்டார்கள். பணம் இவர்களைத் தேடி வருமாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பணத்தின் அதிபதியாவர்கள். சுகபோகத்தின் அதிபதி சுக்கிரன். இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்டரிஷபம் ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பணம்தான் அவர்களுக்கு குறிக்கோளாக இருக்கும்.
லட்சியம் என ஒடி ஓடி பணத்தை சம்பாதிப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் அதிகம் இருக்கும். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் இருப்பார்கள். எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடும் திறன் கொண்டவர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவான் ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். மிதுனம் ராசிக்காரர்களுக்கு பணம் எல்லாம் பெரிய விசயமாக இருக்காது. நிறைய கடன் வாங்கி செலவு செய்பவர்களாக இருப்பார்கள்.
கடகம்
கடகம் ராசி கொண்டவர்கள் சந்திரனின் ராசி அதிபதியாகக் கொண்டவர்கள். பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். வரவுக்கு மேல் செலவு செய்யவே மாட்டார்கள். யாருக்கும் கடன் அதிகமாக கொடுக்கவும் மாட்டார்கள்.
சிம்மம்
பணம் சம்பாதிக்கம் சூட்சமம் தெரிந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனித்துவமாக பணத்தை இவர்கள் சம்பாதிப்பார்களாம். கடன் வாங்கிய பணத்தை கொண்டே சம்பாதித்து அந்த கடனை அடைத்து விடும் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்.
கன்னி
பணம் சம்பாதிப்பதில் கன்னி ராசிக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம். வீண் செலவு செய்யவே மாட்டார்கள். கடன் வாங்கவும் மாட்டார்கள் அப்படி கடன் வாங்கி விட்டால் அதை கட்டும் வரை தூங்கவே மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். பணம் பண்ண தெரிந்த அளவிற்கு சேமிக்க அவர்களுக்கு தெரியாது. செலவு செய்வதில் மன்னர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பணத்தின் மீது பற்றும், நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். காலையில் 10 ரூபாய் வாங்கினால் மாலையில் 100 ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு பணத்தை சேமிக்க தெரியாது.
தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பெரிய விசயமாக இருக்காது. பணத்தின் மீது பற்று இல்லாதவர்கள். நேர்மையாக சம்பாதிக்கும் குணம் கொண்டவர்கள். கடன் வாங்கினால் நேர்மையாக கட்டிவிடும் குணம் கொண்டவர்கள்.
மகரம்
சனி பகவானின் ராசி கொண்டவர்களாக இருப்பார்கள். மகரம் ராசிக்காரர்களுக்கு பணம் பண்ணுவதுதான் அவர்களின் குறிக்கோளாக இருக்கும். சாப்பாடு தூக்கம் இன்றி கூட பணத்தை சம்பாதிப்பார்களாக இருப்பார்கள். பணத்தின் மீது அதிக பற்று கொண்ட இவர்களுக்கு வட்டியில்லாமல் கைமாற்றாக பணம் தர பலர் தயாராக இருப்பார்களாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் சூட்சமம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதில் வெற்றிகரமானவராக இருந்தாலும் கடனை கட்ட முடியாமல் தவிப்பார்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். வீண் செலவு செய்ய மாட்டார்களாம். யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்களாக இருப்பார்களாம்.