பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர்… வெளியான ஆல்பம் சாங்
பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டும் ஆல்பம் சாங் ஒன்று வெளியாகியுள்ளது.
செந்தாமரையே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆல்பம் பாடல் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5ல் அமீரும், பாவனியும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
பாவனியுடன் மலர்ந்த காதல்
அங்கிருந்து பாவனியை மிகத் தீவிரமாக காதலித்து வருகிறார் அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த இருவரும் முதல் பரிசையும் வென்று இருந்தனர். இதனால் அமீருடனான காதலை உறுதி செய்திருந்தார் பாவனி.
பின்னர் இருவரும் இணைந்து சில பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.
பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார்.
வெளியானது ஆல்பம் சாங்
பின்னர் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5 ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் பாவனி. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர்தான் அமீர். இவர் ஒரு நடன இயக்குனர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமானார். பிக்பாஸ் உள்ளே சென்ற நாள் முதலே தான் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் இருவரும் காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இதனிடையே இந்த செந்தாமரையே ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.