'' என்ன ஆனாலும் சரி இந்த பையனை விட்றாதீங்க '' - இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா மாயங்க் அகர்வால் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மட்டும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் குறித்து பேசியுள்ளார்.
அதில்,டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரராக அறிமுகமான பின் இந்திய அணியின் டெஸ்ட் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட மயங்க் அகர்வால் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகிய வீரர்கள் இடம் பெறாததால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது,
இதனை சரியாக பயன்படுத்திய மயங்க் அகர்வால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 150 ரன்கள் அடித்தும் இருந்தால் இன்னிங்சில் அரைசதம் அடித்தும் அசத்தினார்
தற்பொழுது இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய வெற்றிகர கூட்டணி விளையாடுவதால், சுழற்பந்துவீச்சை எளிதாக கையாளும் மயங்க் அகர்வாலை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும்,
அப்படி செய்தால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும் என்று ஆகாஷ் சோப்ரா அதில் கூறியுள்ளார்.