விவசாயி ஆன உனக்கெல்லாம் பெண் தர முடியாது - தக்காளியால் லட்சங்களில் புரளும் இளைஞர் - மிரண்ட பெண் வீட்டார்..!
தக்காளி விற்பனை மூலம் இளம் விவசாயி ஒருவர் தனக்கு பெண் தர மறுத்த பெண் வீட்டாரை மிரள வைத்துள்ளார்.
பெண் தர மறுப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் லக்ஷ்மிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் விவசாயி ராஜேஷ். இவர் படிப்பை முடித்த கையோடு விவசாயத்தில் இறங்கியுள்ளார்.இதனால் வருமானத்தையும் ஈட்ட தொடங்கியுள்ளார்.
அதை தொடர்ந்து பெண் ஒருவரை விரும்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண் வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்டுள்ளார். அப்பொழுது பெண் வீட்டார் அரசு ஊழியர்களுக்கு தான் பெண் கொடுப்போம், விவசாயியை எல்லாம் நம்பி பெண் தர முடியாது என கூறி அனுப்பினர்.
இதனால் சோர்வடைந்த ராஜேஷ் திருமணம் செய்து கொள்ள பெண் பார்ப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் விவசாயம் மூலம் ஒரு பெரிய வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் அதன் பிறகே திருமணம் என்று முடிவு செய்துள்ளார்.
தக்காளியால் லட்சாதிபதி
இந்த நிலையில் தக்காளி மகசூல் செய்துள்ளார். தக்காளி விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வை அடுத்து தக்காளி பயிரிட்டதன் மூலம் ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் ராஜேஷ்.
இதில் கிடைத்த வருமானம் மூலம் ’மஹிந்திரா எக்ஸ்யுவி 700’ கார் ஒன்றினை வாங்கிவிட்டார்.
தற்போது அவர் சபதம் நிறைவேறியதாகவும் இனி சொகுசு காரில் சென்று தான் பெண் பார்க்க போகிறேன். யார் மறுப்பார்கள் என பார்த்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.