“பால் காய்ச்சப் போறோம்” வருவீங்கல்ல - வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

Tamil nadu Viral Photos
By Thahir Nov 15, 2022 11:44 AM GMT
Report

இணையத்தில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஒன்று படு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நம் வீட்டில் இருக்கும் முதியவர்கள் எல்லாம் கல்யாணத்தை பண்ணி பார்...வீட்டை கட்டிப்பார் என்று முதுமொழி ஒன்றை கூறுவார்கள்.

ஆம் தற்போதைய சூழலில் சொந்த வீட்டை கட்டுவது என்பது எளிதான கரியம் ஒன்றும் இல்லை. அதே போன்று சொந்த பந்தங்களை ஒன்று திரட்டி திருமணத்தை செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் கிடையாது அதற்காக தான் நம் முன்னோர்கள் மேலே குறிப்பிட்ட முதுமொழியை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த முதுமொழி இடம்பெற்றுள்ள புதுமனை அழைப்பிதழ் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்லாரும் வந்திடுங்க...

அந்த கடிதத்தில் “பால் காய்ச்சப் போறோம்”... அன்புள்ள உங்களுக்கு, கல்யாணத்தை பண்ணிப் பாருங்க....வீட்டைக் கட்டிப் பாருங்கன்னு சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிட்டோம், இப்போ வீட்டையும் கட்டிட்டோம்....

“பால் காய்ச்சப் போறோம்” வருவீங்கல்ல - வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் | A Viral New House Opening Ceremony Invitation

ரொம்ப ஆசைப்பட்டு அரக்கோணம், சுவால்பேட்டை, மேட்டுத் தெரு, மனை எண்.13ல் எங்களால் கட்டப்பட்ட அன்பு குடில் “புதுமனை புகுவிழா” 04-12-2022 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் நடக்கப் போகுது...எல்லாரும் வந்திடுங்க...

விடியற்காலை வரமுடியாது என்பதற்காக விடிஞ்சதுக்கு அப்புறமாதா வச்சிருக்கோம், வந்து எங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம், உங்களை வரவேற்க வாசலில் நானும், என் மனைவியும், எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம்....வருவீங்கல்ல...? என அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் வீட்டை கட்டிய மேஸ்திரி, கொத்தனார்கள், சென்ட்ரிங் தொழிலாளிகள், ஆசாரிகள், எலக்ட்ரிசியன் ஆகியோர்கள் பெயர்களை அச்சிட்டு அமர்களப்படுத்தியிருக்கின்றனர் காமராஜன் - இந்துமதி தம்பதியினர். காமராஜன் சிறைத்துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.