ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு..!
PM
Modi
Statue
Rameshwaram
Announce
Hanuman
Erected
அனுமன்சிலை
இராமேஸ்வரம்
By Thahir
ராமேஸ்வரத்தில் விரைவில் அனுமன் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேஷ்வானந்த் ஜியின் ஆசிரமத்தில் கட்டப்பட்ட அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அனுமன் ஜெயந்தி நாளான இன்று 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை அவர் திறந்து வைத்தார்.அனுமான்ஜி சார் தாம் திட்டத்தின் கீழ் நாடு முழவதும் வெவ்வேறு திசைகளில் 4 ஹனுமன் சிலைகள் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது சிலையை குஜராத்தில் திறந்து வைத்த பிரதமர் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் அனுமன் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.