யூத பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் - கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு..!
அமெரிக்காவில் யூத பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து துப்பாக்கியால் பல முறை சுட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் மர்ம நபரை பள்ளி வகுப்பறைக்குள் செல்லாமல் இருக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து மர்ம நபர் காரில் ஏறி தப்பி சென்றார்.
மடக்கி பிடித்த போலீசார்
இதனால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
காயம் அடைந்த மர்ம நபர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.