அசுர வேகத்தில் வந்த டூவிலர் - இளைஞரின் வயிற்றுக்குள் மாட்டிய அடிபம்பு கைப்பிடி

Andhra Pradesh
By Thahir Jan 21, 2023 02:43 AM GMT
Report

அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அடிப்பம்பு மீது மோதியதில் கைப்பிடி வயிற்றுக்குள் துளைத்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றுக்குள் துளையிட்டு உள்ளே சென்ற அடிப்பம்பு கைப்பிடி 

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி பகுதியில் உள்ள இந்திரா காலனியில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த அடி பம்பில் மோதியது.

வேகமாக மோதியதில் அடிபம்பு கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று சிக்கிக் கொண்டது. வலி தாங்காமல் அலறி துடித்துள்ளார்.

A pump handle stuck in the young man

அவரது நிலையை பார்த்த பலரும் பரிதாபப்பட்டு உடனடியாக பலவிதமான யோசனைகளை தெரிவித்தனர். மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் கட்டரை கொண்டு வந்து மகன் வயிற்றில் சிக்கிகொண்டிருந்த அடிப்பம்பு கைப்பிடியை வெட்டி எடுத்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி 

அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் காயமடைந்திருந்த நாகராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் அனைத்தையும் அப்புறப்படுத்தினர்.

அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.