இன்று ‘இந்திய ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவுநாள் - சிறப்புப் பார்வை

Missile India
By Nandhini Jul 27, 2022 06:59 AM GMT
Report

அப்துல் கலாம்

1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற் பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ஆகும். இதனை சுருக்கி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்று அழைக்கப்பட்டார்.

அப்துல்கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்து முடித்தார்.

A. P. J. Abdul Kalam

ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் சிறந்த ஈடுபாட்டால் அவரை இந்திய ஏவுகணை நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

A. P. J. Abdul Kalam

1974ம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998ம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பணியாற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

இந்தியாவின் 11வது குடியரசு தலைவர்

அப்துல்கலாம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றினார். இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் செயல்பட்டார். அப்துல்கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002ம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

A. P. J. Abdul Kalam

அக்னி சிறகுகள்

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்தார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றிருக்கிறார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்டார். சிறந்த எழுத்தாளராகவும் அப்துல் கலாம் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

அப்துல் கலாம் மறைவு

மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார் அப்துல் கலாம். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாற்றிக்கொண்டிருந்த போது, அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

A. P. J. Abdul Kalam

இன்று 7ம் ஆண்டு நினைவு நாள்

அவரது சாதனைகளையும், நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்திய மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.     

A. P. J. Abdul Kalam