பெண்கள் வரக்கூடாது...மலை போல் குவிக்கப்பட்ட சோறு - ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ விருந்து

Madurai Festival
By Thahir Jan 07, 2023 09:12 AM GMT
Report

மதுரை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற அசைவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மலை போல் குவிக்கப்பட்ட உணவு வகைகள் 

மதுரை, திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், கருப்பையா முத்தையா சாமி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டு தோறும் அன்னதான விழாவானது மார்கழி மாதத்தை யொட்டி நடைபெறுவது வழக்கம்.

ஆரம்ப காலகட்டத்தில் மிக சிறியதாக நடைபெற்று வந்த விழா பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்க அவர்கள் காணிக்கையாக கொடுக்கும் ஆடுகள் மற்றும் அரிசிகள் மொத்தமாக சமைக்கப்பட்டு இறைவனை வணங்குவர் இவ்விழாவானது 120 ஆண்டுகால நடைபெற்று வருவததாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்பையா முத்தையா சாமிக்கு உருவம் என்ற ஒன்று கிடையாததால் சமைக்கப்படும் உணவை மலை போல் குவித்து பக்தர்கள் வணங்குவர்.

ஆண்களுக்கு மட்டுமே அனுமதி 

இந்நிகழ்ச்சியில் பெண்கள் யாரும் பங்கேற்க கூடாது கோவிலில் இருந்து எடுத்து சொல்லும் விபூதியை கூட பெண்கள் பயன்படுத்த கூடாது என்ற நிபந்தனை உள்ளது. திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பர்.

இன்று நடைபெற்ற விழாவில் 60கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி அசைவ உணவு பரிமாறபட்டது இதில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் இருந்து 7000கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று உணவு உண்டனர்