கரு முட்டை எடுத்ததுக்கு பிறகு கை விட்டுடுவாங்க : ஒரு வாடகை தாயின் கண்ணீர் கதை

By Irumporai Jun 16, 2022 07:38 AM GMT
Report

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சிறுமியின் தாயார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப் பட்டுள்ளது தெரிய வந்ததும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் கருத்தரித்தல் மையத்திற்கு செல்லும் தம்பதிகளிடம் லாப நோக்கில் அதிக பணம் வாங்கும் சில தனியார் மருத்துவமனைகள் சில ஏழை பெண்களின் வறுமையினை பயன்படுத்தி அவர்களை வாடகை தாய்களாக மாற்றப்படும் அவலம் தமிழகத்தில் தொடர்கிறது .

அந்த வகையில் தற்போது ஐபிசி தமிழின் சொல்லப்படாத கதை நிகழ்ச்சியில் ஒரு வாடகை தாயின் கண்ணீர் கதை