எமனாய் வந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி..சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் - நடந்தது என்ன?

Madurai Death
By Swetha Jul 01, 2024 05:07 AM GMT
Report

 சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்டு இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

சிக்கன் கிரேவி..

மதுரை மாநகர் கோசாகுளம், மேலப்பனங்காடி பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (27). இவர் தனது மனைவி சௌமியா மற்றும் 7-வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜின் தந்தை இரவு செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார்.

எமனாய் வந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி..சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் - நடந்தது என்ன? | A Man Died After Eating Reheated Chicken Gravy

அதனை இரவு ஆனந்தராஜ் மற்றும் அவரது குழந்தையும் சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்த கிரேவியை மறுநாள் சூடு செய்து ஆனந்தராஜ் சாப்பிட்டுள்ளார்.இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பரோட்டா,சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்,மகள் பரிதாபமாக உயிரிழப்பு

பரோட்டா,சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்,மகள் பரிதாபமாக உயிரிழப்பு

நடந்தது என்ன?

எனவே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடு சென்று சிகிச்சை அளித்தனர். பிறகு அங்கிருந்து ஆனந்தராஜ் நலமாகி வீடு திரும்பினார். இருப்பினும், வயிற்றுப்போக்கு பிரச்சனை தீரவில்லை.

எமனாய் வந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி..சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் - நடந்தது என்ன? | A Man Died After Eating Reheated Chicken Gravy

இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சூழலில் தான், ஆனந்தராஜின் உடல்நலக்குறைவுக்கு சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி தான் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்