காலில் விழுந்து வேலை கேட்ட பெண்: அமைச்சர் சொன்ன பதில்
சென்னையில் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அமைச்சரின் காலில் விழுந்து இளம்பெண் ஒருவர் விழுந்து உதவி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூந்தமல்லியை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் அப்பகுதியில் வசிக்கும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்து தனக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தான் ஆதரவற்று இருக்கிறேன் என்றும், தனக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டுமென்றும், அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து உள்ளதாகவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.