ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்பனை - அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய உச்சத்தை தொட்ட தக்காளி விலை
ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அந்த வகையில் நேற்று முதல் தக்காளி விலை கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கனமழை காரணமாக அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தைக்கு கடந்த 2 நாட்களில் 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
மேலும் விலை உயர வாய்ப்பு
இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.