ஒரே நேரத்தில் மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்ட கணவன்
ஒரே நேரத்தில் மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் அனுவிக்க ஆசைப்பட்ட கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.
உல்லாசம் அனுபவிக்க திட்டம் போட்ட கணவன்
அமெரிக்காவின் மன்ரோ கவுண்டியில் வசிக்கும் தம்பதி ஸ்டீவன் லோபஸ் (31) ஏஞ்சலா வாஸ்குவெஸ் (20). இருவரும் ஓபன் ரிலேஷன்சிப்பில் இருந்து வந்துள்ளனர்.
அதாவது திருமணப் பந்தத்தில் இருந்தாலும் கூட இவர்கள் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் தங்கள் பார்டனருக்கு தெரிந்தாலும் கூட இப்படி தான் மற்றவர்களுடன் உடலுறவை வைத்துக் கொள்வார்கள் இதற்கு பெயர் தான் ஓபன் ரிலேஷன்சிப் என்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்டீவன் கார் டாக்சி டிவைராக பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில் தனது டாக்ஸியில் செல்ல வந்த 29 வயதான டெல்லா டிராப்பர் என்பவரைச் சந்தித்துள்ளார்.
டிராப்பரை பார்த்தவுடன் ஸ்டீவனுக்கு பிடித்துவிட்டதாம். இதனால் தனது மனைவி ஏஞ்சலா மற்றும் டிராப்பர் ஆகிய இருவருடன் ஒரே நேரத்தில் உல்லாசமாக இருக்க அவர் புதிய திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.
விபரீதத்தில் முடிந்த ஆசை
இதுகுறித்து டிராப்பரிடம் மட்டும் இது குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்லியுள்ளார். அதன் பின் இது குறித்து தனது மனைவியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு ஏஞ்சலா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து உல்லாசத்தை அனுபவிக்க ஒரு நாள் டிராப்பரை தங்கள் வீடிற்கு அழைத்துள்ளனர் அந்த தம்பதி. தொடக்கத்தில் நல்லதாகவே நடந்து வந்த நிலையில், போக போக டிராப்பர் பேசும் பேச்சு தம்பதிக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
உல்லாசத்தின் போது தம்பதியின் அந்தரங்க உறுப்புகளை பற்றி டிராப்பர் தப்பாக பேசிய நிலையில் அந்த தம்பதி எல்லாவற்றையும் உடனே நிறுத்திவிட்டு அந்த பெண்ணை வெளியேற வலியுறுத்தியுள்ளனர்.
டிராப்பர் அங்கிருந்து துளி கூட நகரவில்லை. தொடர்ந்து தம்பதிகளை பற்றி அவதுாறாக பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தம்பதி அந்த பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுந்து சென்று தள்ளியுள்ளனர்.
தப்பி ஓட்டம்
டிராப்பர் தன்னை கூப்பிட்டு வந்து தம்பதி அசிங்கப்படுத்தியதாக கூறி காரை எடுத்து வந்து வீட்டின் முன் இருந்த அவர்கள் மீது மோதியுள்ளார்.
இதில் ஏஞ்சிலாவின் காலில் கார் மோதியதில் சிறு காயம் ஏற்பட்டது. இதை கண்டு கோபமடைந்த ஸ்டீவன் டிராப்பரின் கார் மீது கல்லை எறிந்துள்ளார்.
இதையடுத்து காரில் இருந்து இறங்கி வந்த டிராப்பர் ஏஞ்சிலாவை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஏஞ்சிலா பயங்கரமாக கத்தவே ஸ்டீவன் அங்கு ஓடி வரவே டிராப்பர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அந்த தம்பதி போலீசாரிடம் புகார் அளிக்கவே டிராப்பரை கைது செய்தனர். விசாரணையில் டிராப்பர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்த போது தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.