ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - உடல் அசைவு இல்லாததால் உறவினர்கள் கதறல்

Madhya Pradesh
By Thahir Dec 07, 2022 04:07 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவன் உடல் அசைவுகள் இன்றி சுயநினைவின்றி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

40 அடியில் உடல் அசைவின்றி சிறுவன் 

மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மாண்டவி கிராமத்தில் 8 வயது சிறுவனான தன்மய் சாஹு தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

அப்போது அந்த பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். சிறுவனை பெற்றோர் தேடிய போது ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

A 5-year-old boy fell into a 55-ft deep borewell

பின்னர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

55 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் 40 அடியில் இருப்பதாகவும் சிறுவன் உடல் அசைவுகள் இன்றியும், சுயநினைவின்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.