கல்வியை மறைத்த காதல் - 10 ஆம் வகுப்பு மாணவனுடன் 26 வயது ஆசிரியை ஒட்டம்
தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் இழத்துக் கொண்டு ஓடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவருடன் ஆசிரியை மாயம்
தெலுங்கானா மாநிலம் கச்சிபவுலி நகரில் உள்ள சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 26 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் படித்து வருகிறார். ஆசிரியருக்கு இன்னம் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் அந்த ஆசிரியையும், மாணவனும் ஒரே நாளில் காணாமல் போனதாக இருவீட்டாரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மலர்ந்த காதல்
இதையடுத்து இருவரும் கடத்தப்பட்டனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். இந்த நிலையில் ஆசிரியையும், மாணவரும் காதலித்து வந்ததால் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனால் போலீசார் ஆசிரியை மற்றும் மாணவனை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஆசிரியைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
காதல் வயப்பட்டு மாணவரை ஆசிரியை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.