ஹிட்லருக்கு துணைபோன காவலர்.. 98 வயது முதியவர் மீது ஆயிரக்கணக்கான கொலை வழக்குகள்!

Germany Adolf Hitler
By Vinothini Sep 04, 2023 06:53 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஹிட்லருடன் பணியாற்றிய காவலர் மீது ஆயிரக்கணக்கான கொலை வழக்கு எழுந்துள்ளது.

நாஜிகள்

ஹிட்லர் காலகட்டத்தில், 1943 - 1945 ஆண்டுகளில் ஜெர்மனியில் நாஜிகளின் சக்சன்ஹவுசன் என்ற வதை முகாம் நடைபெற்றது. அதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள், பெர்லினுக்கு வடக்கே உள்ள சக்சென் ஹவுசன் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

98-years-old-man-case-for-assisting-nazi-campdeath

ஆயிரக்கணக்கானோர் பட்டினி, நோய் மற்றும் கட்டாய உழைப்பு உள்ளிட்ட காரணங்களால் துன்புற்று மடிய, மேலும் பல ஆயிரக்கணக்கானோர் விஷ வாயுவை சுவாசிக்கச் செய்து கொல்லப்பட்டனர். இதில் காவலராக பணியாற்றி வந்தவர், இவருக்கு தற்பொழுது 98 வயது. இவர் அந்த முகாமில் நடத்தப்பட்ட வதைமுகாமில் ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு துணைபோனதாக, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு எழுந்துள்ளது.

98 வயது முதியவர்

இந்நிலையில், இவர் தற்பொழுது பிராங்க்பர்ட் அருகே மெயின் கின்சிக் பகுதியில் தற்போது இவர் வசித்து வருகிறார். நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்கப்படாத நிலையில் அவர் குறித்தான் முழுமையான விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

98-years-old-man-case-for-assisting-nazi-campdeath

சுமார் 3000க்கும் மேலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிகழ்ந்தபோது அவர் சிறுவனுக்கான வயதில் இருந்ததால், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் தண்டனை விதிப்பில் சட்டப்படி தொய்வு நேரக்கூடும் எனத் தெரிய வருகிறது.

தற்பொழுது இவருக்கு 98 வயதாவதால் இவரால் விசாரணைக்கு உடன்பட முடியுமா என்று மருத்துவர்களை போலீசார் கேட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.