தமிழக மீனவர்கள் 9 பேர் கைது - இலங்கை கடற்படை அதிரடி
Indian fishermen
India
Sri Lanka Navy
By Thahir
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கடை கைது செய்துள்ளது.
மேலும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.