குழந்தைக்கு போதைப் பொருள் கொடுத்த 17 வயது தாய்; துடிதுடித்த பரிதாபம் - அதிர்ச்சி!

United States of America Crime Death
By Jiyath Jul 14, 2023 07:46 AM GMT
Report

பாலுடன் போதைப்பொருளை சேர்த்துக் கொடுத்து குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை பலி

அமெரிக்காவின் காளஹான் என்ற பகுதியில் 17 வயது மட்டுமே நிரம்பிய தாய் ஒருவர் குழந்தைக்கு பால்பவுடருடன் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

குழந்தைக்கு போதைப் பொருள் கொடுத்த 17 வயது தாய்; துடிதுடித்த பரிதாபம் - அதிர்ச்சி! | 9 Month Old Baby Dies Ibc 09

இதனால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்த சம்பத்தை அறிந்து போலீசார் வந்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்திருக்கிறது. பின்னர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடலில் 10 பெரிய மனிதர்களின் கொள்ளும் அளவிற்கு ஃபென்டானில் என்ற போதைப்பொருள் இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

சிறுமி கைது

இதனைத்தொடர்ந்து கொலை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காக சிறுமியை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணை செய்தபோது முதலில் எனக்கு ஏதும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

குழந்தைக்கு போதைப் பொருள் கொடுத்த 17 வயது தாய்; துடிதுடித்த பரிதாபம் - அதிர்ச்சி! | 9 Month Old Baby Dies Ibc 09

பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் "குழந்தையை என்னால் பராமரிக்க முடியவில்லை என்றும் குழந்தை தூங்கினால் தானும் சிறிது நேரம் தூங்கலாம் என்பதற்காகதான் பாலுடன் சிறிது போதைப் பொருளை கொடுத்தேன் என்றும் சிறுமி போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

மேலும் அது கொக்கைன் என்றே தான் நினைத்ததாகவும் ஃபென்டானில் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்த சிறுமி அழைத்து செல்லும் வழியில் தான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று போலீசாரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சிறுமிக்கு 17 வயது என்பதால் அவரின் அடையாளங்கள் ஏதும் போலீசார் வெளியிடவில்லை.