சிறுமிக்கு பாலியல் தொல்லை : 86 வயது முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

Sexual harassment
By Swetha Subash Apr 22, 2022 03:01 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் 86 வயதான முதியவர் குப்புசாமி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : 86 வயது முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு | 86 Year Old Man Gets Life Long Imprisonment

இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.