பிச்சை எடுத்து சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்தை அன்னதானத்திற்கு கொடுத்த 80 வயது பாட்டி - குவியும் பாராட்டு

By Nandhini Apr 27, 2022 05:15 AM GMT
Report

கர்நாடக மாநிலம், உடுப்பி, காச்சகோட்டைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா. இவருடைய கணவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

சாப்பிட்ட வழியில்லாமல் தவித்த அஸ்வத்தம்மா, கர்நாடகாவில் உள்ள பல கோவில்களில் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தியுள்ளார்.

வருடா வருடம், உடுப்பில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். இந்தக் கோவிலுக்கு அன்னதானம் வழங்குவதை அஸ்வத்தம்மா வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, பிச்சை எடுக்கும் பணத்தை தன் செலவுக்கு போக மீதி உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார்.

அப்படி சேர்த்து வைத்த பணத்தை கோவில்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் நன்கொடையாக கொடுத்து வந்துள்ளார் அஸ்வத்தம்மா.

இந்நிலையில், சமீபத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அன்னதானத்திற்காக சேர்த்து வைத்த ரூ.1 லட்சம் பணத்தை அஸ்வத்தம்மா வழங்கி இருக்கிறார்.

இது குறித்த செய்திகளும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூகவலைத்தளத்தில் பலர் அஸ்வத்தம்மாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.    

பிச்சை எடுத்து சேர்த்து வைத்த ரூ.1 லட்சத்தை அன்னதானத்திற்கு கொடுத்த 80 வயது பாட்டி - குவியும் பாராட்டு | 80 Year Old Grandmother 1 Lakh Donated