சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் இன்று பதவியேற்பு!

Chennai
By Swetha Subash Jun 04, 2022 06:08 AM GMT
Report

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி முன்னிலையில் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள சந்திர சேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சக்திகுமார் சுகுமாரா குரூப், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொளிஜியம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் இன்று பதவியேற்பு! | 8 Madras Hc Judges Sworn In As Permanent Judges

இந்த பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் இன்று பதவியேற்பு! | 8 Madras Hc Judges Sworn In As Permanent Judges

இந்த நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 8 பேருக்கு தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமான உறுதிமொழியை முன்மொழிந்து வைத்தார்.

9 பேரில் சக்திகுமார் சுகுமாரா குரூப்பை தவிற மற்ற நீதிபதிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சக்திகுமார் சுகுமாரா குரூப் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.