மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

MK Stalin Mahatma Gandhi 75th Day Remembrance Respect CM
By Thahir Jan 30, 2022 06:46 AM GMT
Report

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

காந்தியடிகளின் 75-வது நினைவு நாள் மற்றும் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் உருவச்சிலைக்கு கீழ்வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற் றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.