பேரக் குழந்தைகளுடன் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம்...!

Independence Day O. Panneerselvam
By Nandhini Aug 15, 2022 07:55 AM GMT
Report

பேரக் குழந்தைகளுடன் தேசிய கொடியை ஏற்றி தன் இல்லத்தில் 75வது சுதந்திர தின விழாவை ஓ.பன்னீர்செல்வம் கொண்டாடினார். 

75-வது சுதந்திர தினம்

இன்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். மேலும், உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தேசிய கொடியை ஏற்றிய ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

அப்போது, பேரக்குழந்தைகள் மற்றும் ஆதாரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை தன் வீட்டில் ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்பு, அங்கிருந்தவர்களுக்கு 75-வது சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் 75-வது சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.   

O. Panneerselvam