முற்றும் மோதல் ...இறுதி கட்டத்தை எட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்..!!
நடைபெற்ற 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றன.
7 தொகுதி சட்டமன்ற தேர்தல்
தேர்தல் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் வரும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதால் இது இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கட்சிகளிடையே பெரும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாக இது அமைந்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் முறையே இரு கூட்டணி கட்சிகளும் தங்களது பலத்தை சரிசமமாக வெளிப்படுத்தியுள்ளன. சூடுபிடிக்கும் இடைதேர்தல் இதில் கேரளா புதுப்பள்ளி தொகுதியில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார்.
அதே போல உத்திரபிரதேச மாநிலத்தின் கோசி தொகுதிக்கான தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் கிட்டத்தட்ட 21 ஆயிரம் வாக்குகளில் வித்தியாசத்தில் பாஜகவின் தாரா சிங்கை விட முன்னிலையில் உள்ளார். அதே போல மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துப்குரி சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்மலா சந்திரா ராய் பாஜகவின் டாப்ஸி ராய்யை விட 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரத்தில், திரிபுரா மாநிலத்தின் தன்பூர் மற்றும் போக்ஸாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 66 % சிறுபான்மை வாக்காளர்கள் அதிகமுள்ள போக்ஸாநகர் தொகுதியில் பாஜகவின் தஃபஜ்ஜால் ஹொசைன் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே போல, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தன்பூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் பிந்து தேப்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வரும் பாகேஷ்வர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 750 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
உத்திரகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் தொகுதியில் பாஜகவின் பார்வதி தாஸ் 2041 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் பசந்த் குமாரை விட முன்னிலையில் உள்ளார்.