தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தமிழகத்தில் முடங்கிய போக்குவரத்து பாதிப்பு : போக்குவரத்துத்துறை வெளியிட்ட தகவல்

By Irumporai Mar 28, 2022 05:11 AM GMT
Report

அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 67% பேருந்துகள் ஓடவில்லை என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது

விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மக்கள் அவதி: மேலும்,வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

இந்த நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும்  சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்,தமிழகத்தில் காலை 8 மணி நிலவரப்படி 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும்,33%(5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது

.குறிப்பாக,சென்னையில் 3175 பேருந்துகளில் 318 பேருந்துகள்(10.02%) மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.