துணையோடு சேராத 62 வயது மலைப்பாம்பு - முட்டைகள் இட்டதால் ஆச்சர்யம்!
துணையோடு சேராத மலைப்பாம்பு முட்டைகள் இட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாம்பு
அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் 62 வயது பெண் மலைப்பாம்பு ஒன்று உள்ளது. இது ஆண் பாம்புடன் தொடர்பு இல்லாமல் முட்டைகளை இட்டுள்ளது.

இந்த அசாதாரண நிகழ்வு, அறிவியல் உலகில் பெரும் கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்வு 'பார்த்தினோஜெனிசிஸ்' எனப்படும் கன்னிப்பெருக்கம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
விஞ்ஞானிகள் அதிர்ச்சி
தொடர்ந்து, கருவுறுதல் இன்றி முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் இந்த அரிய வகை இனப்பெருக்க முறை குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பேசிய உயிரியல் பூங்காவின் ஊர்வனவியல் மேலாளர் மார்க் வானர், “வரலாற்றிலேயே இவ்வளவு வயதான பாம்பு முட்டையிட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.