60 வயது பெண்களை கூட ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்து, தூக்கில் தொங்கவிடுகிறார்கள் - உக்ரைன் எம்.பி.க்கள் கதறல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 23வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், உக்ரைன் போரில் 60 வயது பெண்களை கூட ரஷ்ய வீரர்கள் சீரழித்து, பின்னர் தூக்கில் தொங்கவிடுவதாக உக்ரைன் பெண் எம்.பிக்கள் கதறி இருக்கிறார்கள்.
இது குறித்து உக்ரைனின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பியான லிசியா வெசிலின்கோ கூறியதாவது -
ரஷ்ய வீரர்கள் பல வயதான பெண்களை கூட கற்பழித்து சீரழிக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் முதலில் தங்கள் குழந்தைகளை பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, பின்னர் வீட்டிலிருந்து வெளியேறும்போது ரஷ்யவீரர்களிடம் இப்படி சிக்கிக் கொள்கிறார்கள்.
பல பெண்களை பலாத்காரம் செய்து, தூக்கிலிட்டு ரஷ்ய வீரர்கள் கொலை செய்கிறார்கள்.
சில பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிறுவர், சிறுமிகளையும் குறி வைத்து ரஷ்ப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குடும்பத்தினர் எவரும் இந்த கொடுமை பற்றி வெளிப்படையாக பேச முன்வரவில்லை.
இவ்வாறு கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்னொரு உக்ரேனிய எம்.பி.மரியா கூறுகையில், போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களுக்காக நாம் சேகரிக்கும் உண்மைகள் இவை என்றார்.