60 வயது மூதாட்டியின் சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயது இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் 60 வயது மூதாட்டியை கொலை செய்து அவரது சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்ட 19 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தியாவில் அரங்கேறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் வெளியிட்டது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலேயே அதிகளவு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அம்மாநிலத்தில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 310 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராஜஸ்தானில் 60 வயது மூதாட்டியை கொலை செய்து அவரது சடலத்துடன் 19 வயது இளைஞர் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனுமன்கர் மாவட்டத்தில் பிலிபங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 60 வயது மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்த 19 வயது இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை கொலை செய்து அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் மூதாட்டியின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக உறவினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் சுரேந்தர் என்றும் சம்பவம் நடைபெறுவதற்கு முன் தினமே அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது.