திருச்செந்தூர் சென்று திரும்பிய வேன் பயங்கர விபத்து - 6 பேர் பலி!

Accident Death Kallakurichi
By Sumathi Sep 25, 2024 04:53 AM GMT
Report

மரத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேன் மோதி விபத்து

ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் சென்று திரும்பிய வேன் பயங்கர விபத்து - 6 பேர் பலி! | 6 People Dead Van Crashed Into A Tree Ulundurpet

அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் எனும் இடத்தில் கனமழை பெய்துள்ளது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையோர மரத்தில் அதிபயங்கரமாக மோதியது.

அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 5 பேர் பலி!

அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 5 பேர் பலி!

6 பேர் பலி

இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். உடனே, தகவலறிந்து விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருச்செந்தூர் சென்று திரும்பிய வேன் பயங்கர விபத்து - 6 பேர் பலி! | 6 People Dead Van Crashed Into A Tree Ulundurpet

தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.