பொதுத்தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - வெளியான அதிர்ச்சி தகவல்..!

Tamil nadu
By Thahir Jun 02, 2022 05:33 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் 10,11,மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய முதல் நாள் தோறும் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

பொதுத்தேர்வில்  6 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - வெளியான அதிர்ச்சி தகவல்..! | 6 Lakh Students Absent In General Examination

இதையடுத்து அரசு தேர்வுகள் துறை தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கையை அறிவித்தது. தற்போது இதுவரை 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,49,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தேர்வு எழுதாமலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மீதான ஆர்வம் குறைந்ததற்கான காரணமாக பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தேர்வில் பங்கேற்காத 6,49,467 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க அந்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.