கடும் கடல் சீற்றம்; 6 வீடுகள் இடிந்து விழுந்தது - பொதுமக்கள் பீதி

Puducherry Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 04:03 AM GMT
Report

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் கடும் கடல் சீற்றத்தால் கரையை ஒட்டியுள்ள 6 வீடுகள் இடிந்து விழுந்தது.

சென்னைக்கு அருகாமையில் மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.

இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.

பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

6 houses collapsed - public panic

இந்த புயல் சென்னையில் இருந்து 270 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

6 வீடுகள் இடிந்து விழுந்தது 

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 270 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 200 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடும் கடல் சீற்றத்தால் கரையை ஒட்டியுள்ள 6 வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

6 houses collapsed - public panic

வீடுகள் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன. வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் அசாம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடு இடிந்த பகுதிகளை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை என்ற குற்ற்ச்சாட்டு எழுந்துள்ளது.