6 வயது சிறுமியையும் ஆட்டையும் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்த சிறுவன்

Uttar Pradesh
By Karthikraja Aug 14, 2024 07:50 AM GMT
Report

6 வயது சிறுமி மற்றும் ஆட்டை அரசு ஊழியர் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

6 வயது சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலம் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த கஜேந்திர சிங் (57) என்பவர் வேளாண் மேம்பாட்டு அதிகாரியாக ஷிகர்பூர் தொகுதியில் பணியாற்றி வருகிறார்.

Bulandshahr goat harrassed

இவர் பணி நிமித்தமாக புலந்த்ஷாஹரி கிராமம் சென்ற போது 6 வயது சிறுமி ஒருவர் வீட்டின் திண்ணையில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அவரது வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த கஜேந்திர சிங், சிறுமியை வீட்டின் உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

அசைவம் சமைத்து தர கேட்ட கணவர் - அடித்தே கொன்ற மனைவி

அசைவம் சமைத்து தர கேட்ட கணவர் - அடித்தே கொன்ற மனைவி

வீடியோ பதிவு

அதன்பின் வெளியே வந்த அவர் அங்கு தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டுடனும் இயற்கைக்கு மாறான உடலுறுவு கொண்டுள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுவன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கஜேந்திர சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bulandshahr Gajendra singh

தகவலறிந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியரை புலந்த்ஷாஹரி கிராமத்திற்கு சென்று, விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த குடும்பத்துக்கு ரூ 8.25 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.